மக்கள் கருத்துக்களே திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்:-கனிமொழி எம்பி பேட்டி!

வேலூர் பெண்கள் பாதுகாப்பு குறித்த அம்சங்களும் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும் திமுக துணை பொதுசெயலாளருமான கனிமொழி வேலூரில் பேட்டி.
வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் உரிமைகளை மீட்டிட ஸ்டாலினின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய நாட்டின் கருத்துக்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா பங்கேற்றார்.
இதில் விவசாயிகள், நெசவாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், சிறுபான்மை மக்கள், மாணவர்கள், வணிகர் சங்கங்கள், கல்வி நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன்,நந்தகுமார், ஈஸ்வரப்பன்,நல்லதம்பி.அமுலு வில்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் இஸ்லாமியர் கூட்டமைப்பு என்கின்ற பெயரில் ஜிஎஸ் இக்பால், எச். ஷெரிக் பாஷா, சவுத் அலி உள்ளிட்ட ஏராளமானோர் கனிமொழி எம் பி யை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.
அதில் வேலூர் கோட்டை உட்புறம் இந்துக்களுக்கு கோவிலிலும், கிறிஸ்தவர்களுக்கு தேவாலயமும், இஸ்லாமியர்களுக்கு மசூதியும் உள்ளது. ஆனால் மசூதியில்தொழுகைக்கு அனுமதிக்காமல் பூட்டி வைத்திருக்கிறார்கள்.
ஆகவே ஏனைய சமுதாயத்தினருக்கு ஆலயங்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருப்பது போலவே, மசூதியும் தொழுகைக்கு திறந்து விடப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
பின்னர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில் மக்கள் கருத்தை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்க பல மாவட்டங்களுக்கு சென்று கருத்துக்களை கேட்டு வருகிறோம்.
மாணவர்கள் தொழிலாளிகள் உள்ளிட்டோர்களிடம் கருத்து கேட்கிறோம் இதனை ஒருங்கிணைத்து தேர்தல் அறிக்கையை உருவாக்குவோம்.
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியுள்ளார்.
அதே போல் பிரதம்ர் மோடியும் அனைவர் வங்கி கணக்கில் 15 லட்சம் இருக்கும் என்றார்அதற்காக காத்திருக்கிறோம்.
தேர்தல் பத்திரம் செல்லாது, வெளிப்படைதன்மை வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
50 சதவிகிதத்திற்கும் மேல் தேர்தல் பத்திரம் பாஜகவுக்கு கிடைத்துள்ளது அவர்கள் யாரையும் குற்றம் சொல்ல கூடிய இடத்தில் இல்லை அதை தான் உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது.
திமுக பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் அவர் ஆட்சிகாலத்தில் தமிழகம் எல்லாதுறைகளிலும் பின் நோக்கி தான் சென்றது.
தற்போது கல்வி உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் திமுக ஆட்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
பாஜக சிபி.ஐ மூலம் எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்கிறது டெல்லியில் விவசாயிகளை தீவிரவாதிகளை ஒடுக்குவதை போல் ஒடுக்குகின்றனர் தொடர்ந்து அச்சுறுத்தல் கைது நடவடிக்கையை செய்கின்றனர் .
ஊடகங்களின் நிலையும் என்ன என்பது தெரியும் என்று எம்பி கனிமொழி சொன்னார்.