தியானம் செய்ய தமிழகம் வரும் பிரதமர் மோடி! சென்ற முறை கேதார்நாத்... இம்முறை விவேகானந்தர் நினைவிடம்!

ம.பா.கெஜராஜ்,
மக்களவை தேர்தலுக்கான ஏழாம் கட்ட வாக்குபதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் அன்று தான் வாக்குபதிவு நடைபெறுகிறது . அப்படியிருக்க வரும் 30-ம் தேதி மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார். அங்குள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார்.
கேராளா வந்து பின்னர் தமிழகம் வரும் அவர் கன்னியாகுமரியில் உள்ள உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி, அன்று மாலை முதல் ஜூன் 1-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் தியானம் செய்கிறார்¢.
இதே போல் தான் அவர் கடந்த 2019 மக்களவை தேர்தலும் 7 கட்டமாக நடந்தது. கடைசி கட்ட வாக்குப்பதிவு மே 19-ம் தேதி நடைபெற்றது. மே 17-ம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், பிரதமர் மோடி உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு சென்றார்.
பின்னர், கேதார்நாத்தில் உள்ள குகையில் தொடர்ந்து 17 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார். அவர் தங்கியிருந்த அறையில் மின்சார வசதி கிடையாது. ஒரே ஒரு படுக்கை மட்டுமே இருந்தது. செல்போன் நெட்வொர்க் செயல்படாது என்று தகவல்கள் வெளியானது.
ஆனால் இம்முறை விவேகாந்தர் நினைவிடத்துக்கு வரஉள்ளார்.