பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்ய மாட்டேன்! முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆளுநர்!

உ.சசிகுமார்,
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்ய வழக்கு தடையாக இருப்பதாக ஆளுநர் கடிதம் எழுதியிருக்கிறார்.
ஊழல் வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. நீதிமன்ற தீர்ப்பின் நகல் வந்தவுடன் திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தெரிவித்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து, அமைச்சரவையில் மீண்டும் பொன்முடியை சேர்க்க பரிந்துரைத்து ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், திமுக எம்எல்ஏ பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பொன்முடி மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது.