ஒலிம்பியா நிறுவனத்தாரால் வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்பட்ட டி.ஜி.பி! பெண் போலிஸ் அதிகாரி விதிமீறல்!

ஒலிம்பியா நிறுவனத்தாரால் வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்பட்ட டி.ஜி.பி! பெண் போலிஸ் அதிகாரி விதிமீறல்!

 ம.பா.கெஜராஜ்

  சென்னையை சேர்ந்த ஒலிம்பியா என்கிற கட்டுமான நிறுவனத்தினரின் அடாவடி செயல்களுக்கு டி.ஜி.பி. அந்தஸ்து கொண்ட அதிகாரி ஒத்துவரவில்லை. இதனால் அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

 அவ்வளவு சாதாரணமாக செய்ய முடியாத இந்த செயலை மேற்படி நிறுவனம் செய்திருப்பதற்கு அரசியல் பின்னணியும், அதே போல் காவல் பெண் அதிகாரி ஒருவர் செய்த தில்லாலங்கடியுமே முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.

  இது குறித்த விவரம் வருமாறு,

  சென்னையை மையமாக கொண்டது ஒலிம்பியா என்கிற கட்டுமான நிறுவனம். இந்த நிறுவனம் ஏற்கனவே கட்டி முடித்த 5 அடுக்கு ஹோட்டலுக்கு தீயணைப்பு துறையில் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

 இந்த கட்டிடம் சி.எம்.டி.ஏ அனுமதி இல்லாமல் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது என்பதால் அவர்கள் இந்த கட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

   எப்படியும் அனுமதி பெற வேண்டும் என்று குறுக்கு வழியை யோசித்த ஒலிம்பியா நிறுவனம் அந்த ஹோட்டலை முதியோர் இல்லமாக மாற்றி விட்டதாக டிராமா போட்டு சி.எம்.டி.ஏ.வில் அனுமதி கேட்டனர். விண்ணப்பத்தை சரி பார்த்த சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் அங்கு முறையான பார்க்கிங், அவசர வழி, தீ பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை செய்யவில்லை என அனுமதி மறுத்தது.

 சி.எம்.டி.ஏ.வை ஏமாற்றி அனுமதி பெற முயன்று தோற்று போன ஒலிம்பியா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டனர்.

 விசாரணை செய்த உயர் நீதிமன்றம் பாதுகாப்பான அம்சங்கள் இல்லை, அதுபோக அரசு விதிகள் முற்றிலும் பின்பற்றப்படவில்லை, மேலும் கட்டிடம் சென்னையின் பிரதான சாலையில் அமைந்துள்ள நிலையில், அங்கு  விபத்து ஏதும் நடந்தால்ல் பெரும் சிக்கல் ஏற்படும் என்று அந்த கட்டத்தை இடிக்கச் சொல்லி உத்தரவு போட்டது.

   தேவை ஏற்பட்டால் கட்டிடத்தை இடித்து விட்டு விதிமுறைகளுடன் புதிய கட்டடத்தை கட்டலாம் என உத்தரவில் குறிப்பிட்டது.

  பலகோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்ட கட்டத்தை இடிக்காமலேயே அனுமதி பெறுவது குறித்து திட்டமிட்ட ஒலிம்பியா நிறுவனம் சி.எம்.டி.ஏ.வில் சில முக்கியமான நபர்களை கவனித்து விட்டு, தீயணைப்பு துறையில் என்.ஓ.சி. வாங்க  பிரியா ரவிச்சந்திரன் என்பவருக்கு பெருந்தொகையை லஞ்சமாக கொடுத்தனராம்.

  அதன் விளைவு கோப்பை மூவ் செய்ய பிரியாவும் அதில் கையெழுத்து போட்டு அந்தக் கோப்பை டி.ஜி.பி.யான ரவியிடம் பைனல் ஜி.ஓ. அப்ரூவலுக்காக கொண்டு சென்றனர்.

 அந்த பைலை உஷாராக வாசித்துப் பார்த்த டிஜிபி ரவி ஆடிப்போனார். சி.எம்.டி.ஏ.வின் அனுமதியில்லை, அதைவிட முக்கியமாக சென்னை உயர்நீதிமன்றம் இடிக்கச் சொல்லி உத்தரவு போட்டுள்ளது. அதை மீறி எப்படிம்மா இதுல கையெழுத்து போட்டீங்க? ஏன் போட்டீங்க என்று கடிந்த டிஜிபி ரவி மேற்படி ஃபைலை ரிஜக்ட் செய்து விட்டார்.

  உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கையெழுத்திட்ட் பிரியா ரவிச்சந்திரன் அதிமுக தீவிர விசுவாசி. எடப்பாடியின் உறவினர்.  இந்நிலையில் இவர் பீனீஸ்க் மாலில் ரெனிவல் கோப்பிலும் விதிமுறைகள் மீறி கோப்பில் கையெழுத்து போட்டத்தை கண்டுபிடித்த டிஜிபி ரவி, பிரியாவை மாற்ற உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டிக்கு கோப்புகளை அனுப்பினாராம்.

 ஆனால் அதில் எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை. பிரியாவின் கணவர் ரவிச்சந்திரன் என்பவரே இதற்கு காரணம்.

 ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அவர் தற்போது மத்திய அமலாக்கத்துறையில் சிறப்பு இயக்குநராக உள்ளார். அந்த ஓதாவில் பனிந்திர ரெட்டியிடம் பேசி மாற்றும் கோப்பை பெண்டிங் வைத்துவிட்டாராம்.

  இதற்கிடையில் ஒலிம்பியா நிறுவனம் ஆளுங்கட்சியில் உள்ள மூத்தவரின் வாரிசை பிடித்து பிரச்னையை முடித்து தர கோரிக்கை வைத்து, அதற்காக பெருந்தொகை கைமாறியதாம்.

   இந்நிலையில் ஆளுங்கட்சி மூத்தவர் மற்றும் முதல்வருக்கு உளவுத்துறை உச்ச அதிகாரியின் மூலமாக தகவலை மாற்றிச் சொல்லி டி.ஜி.பி. ரவி பணம் கேட்டதாக முதல்வருக்கு தவறான தகவலை குறிப்பெழுதுகிறார்கள்.

  இதன் காரணமாக டிஜிபியை மாறுதல் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கிறார்கள்.

  மேற்படி டிஜிபி நேர்மையான ஆபிசர் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளதாம், அவர் தவறான சிபாரிசுகளை நிராகரிப்பவர் என்பதால் அவருக்கு ஏகப்பட்ட விரோதம் உள்ளது. அதுதான் இப்போது இப்படி அவரை வெயிட்டிங் லிஸ்டில் போட்டுள்ளது என்று காக்கிவட்டாரங்கள் மனம் கசக்கிறார்கள்.