அதிகாலை முதல் வரிசை கட்டி நின்ற பொதுமக்கள்! தபால் நிலையத்தில் பரபரப்பு!

அதிகாலை முதல் வரிசை கட்டி நின்ற பொதுமக்கள்! தபால் நிலையத்தில் பரபரப்பு!

ஜி.கே.சேகரன்,
  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்ட  வழங்கல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ரேசன் கார்டுடன் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 இதனை தொடர்ந்து  ரேசன் கடைகளில் பல நபர்களின் கைரேகை பதிவு ஆகாத நிலையில், ஆதார் எண்ணில் கைரேகை வைத்து பதிவு செய்து வர வேண்டும், ஆதாரில் திருத்தம் இருந்தால் அதனை செய்து வர வேண்டும் என்று ரேசன் கடை ஊழியர்கள் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. 

 இந்நிலையில்,  மாநில அரசு சார்பில்,திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் ஆதார் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

 அதேபோல் மத்திய அரசு சார்பில் திருப்பத்தூர் தலைமை தபால் நிலையத்தில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

அங்கு இயங்கும் ஆதார் மையத்தில் நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு டோக்கன் வழங்கி ஆதார் புகைப்படம் எடுப்பதை அறிந்த மக்கள் தலைமை தபால் நிலையத்தில் முகாமிட்டுள்ளனர்.

 அதற்காக அதிகாலை முதலே அங்கு குவிந்து காத்திருக்கின்றனர்.

 இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கூடுதல் ஆதார் மையம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், அல்லது ஆன்லைன் வாயிலாக ஆதார் கார்டு விண்ணப்பிக்க வழிவகை செய்தால் சிரமம் இன்றி. இருக்கும் என கோரிக்கை வைத்தனர்.

குறிப்பு:-ஆதார் அட்டையுடன், ரேஷன் அட்டையை இணைக்க வேண்டும் என்பது குறித்து அரசு பலமுறை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல் கால அவகாசம் அளித்தும் கூட மக்கள் மெத்தனமாக இருந்துவிட்டு திடீரென இப்படி முட்டி மோதிக் கொண்டு வருகிறார்கள்.
அதை தவிர்க்க வேண்டும் என்றால் அரசு வெளியிடும் அறிவிப்பை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகள் சொல்கிறார்கள்.