தேர்தல் களத்தை சமாளிக்க கூடுதல் பணிக் குழுவை அமைத்தார் எடப்பாடி!

டி.இ.முகமது,
திமுக வின் தேர்தல் பிரச்சாரம் ரவுண்டு கட்டி கலக்கி வருவதை அறிவோம். இந்நிலையில் திமுகவுக்கு மேடையில் பதிலளிக்க எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பேசி வருகிறார். அதே போல் அதிமுகவின் தேர்தல் பணிகளில் சில பல பகுதிகளில் மந்தமாக இருப்பதாக அக்கட்சி தலைமைக்கு தகவல்கள் பறக்கின்றன.
அதை சமாளிக்க தர்மபுரி, சென்னை வடக்கு, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தென்காசி தொகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், சென்னை வடக்கு தொகுதி- திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி, கன்னியாகுமரி-முன்னாள் அமைச்சர் நாஞ்சில் எம்.வின்சென்ட், காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், தென்காசி- கொள்கை பரப்பு துணை செயலாளர் அய்யாதுரை பாண்டியன் ஆகியோர் அதிமுக கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பெதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.