திமுக ஒன்றிய செயலாளர் செய்த பஞ்சாயத்தால் களேபரம்! ராணுவ வீரரின் மனைவியிடம் மகளிர் ஆணைய தலைவர் விசாரணை!

திமுக ஒன்றிய செயலாளர் செய்த பஞ்சாயத்தால் களேபரம்! ராணுவ வீரரின் மனைவியிடம் மகளிர் ஆணைய தலைவர் விசாரணை!

 ஜி.கே.சேகரன்,

 திமுக ஒன்றிய செயலாளர் செய்த பஞ்சாயத்தால் களேபரம்வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியை மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி மற்றும் சீதாபதி சொக்கலிங்கம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை - பாதிக்கப்பட்ட தங்களை ஆணையமோ யாருமே கேட்கவில்லை என எதிர்தரப்பு குற்றச்சாட்டு.

 வேலூர் மாவட்டம், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவண்ணாமலை மாவட்ட படவேடு கிராமத்தில் ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி என்பவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடை நடத்தி வந்தார்.

  இவரது கணவர் பிரபாகர் என்பவர் காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவி கீர்த்தியை அதே ஊரை சேர்ந்த ஒரு கும்பல் அடித்து மானபங்கம் செய்தததாகவும் காவல்துறை உடனடியாக தலையிட்டு தனது மனைவியை காப்பாற்றுமாறு வீடியோவில் பேசி அதை வெளியிட்டிருந்தார்.

 இது சமூக வளைதலங்களில் வைரலானது, இந்நிலையில் அந்த கடையை ரூ.9. 50 லட்சம் கொடுத்தும் கீர்த்தி கடையை காலி செய்து தராததால், கடைக்கு உரிமையாளர்கள் என்று கூறப்படும் ஜீவா மற்றும் உதயா ஆகியோர் இது குறித்து கேட்டுள்ளார்கள்.

  அப்போது இருதரப்பும் மோதல் ஏற்பட்டது,  இதில் ராமு என்பவரையும் கீர்த்தியின் உறவினர்கள் தாக்கியுள்ளனர்.

அப்படியிருக்க, கீர்த்தி தன்னை மானபங்கம் செய்ததாக கூறி சந்தவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அதே போல் ராமு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டதில் காவல்துறையினர் இருதரப்பு மீது வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.

 இந்நிலையில், கீர்த்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி மற்றும் உறுப்பினர் சீதாபதி சொக்கலிங்கம் ஆகியோர் ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியை நேரில் சென்று விசாரித்து அவருக்கு பாதுகாப்பு அளிக்கபடும் என உறுதியளித்துள்ளனர்.

 மேலும் அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் கீர்த்தியின் உறவினர்கள் ராமு என்பவரை கத்தியால் மண்டையில் தாக்கியதாக கூறப்படும் நிலையில், அவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 அப்படியிருக்க ராமு தரப்பினரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கீர்த்தி தரப்பில் ஒருவரையும் காவல்துறை கைது செய்யவில்லை.

  ஒருதலைபட்சமாக செயல்படுவதாக ராமு குற்றம்சாட்டும் நிலையில், கீர்த்தியை மானபங்கம் செய்யவில்லை இது உண்மைக்கு புறம்பானது எனவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில் ராணு வீரர் பிரபாகர் நான் காணொலி வெளியிட்டுள்ளேன் நமக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கவுள்ளதாக நடந்ததை இரண்டு பங்காக சொல்லுங்கள் என பிரபாகரன் அவரின் உறவினருடன் பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது.

 அந்த ஆடியோ வெளியாகியுள்ளதால் ராணுவ வீரரின் இரண்டாவது ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் ஏற்கனவே தெரிவிக்கையில் ராணுவ வீரர் பிரபாகருக்கு படவேட்டிலிருந்து தவறான தகவல் கொக்டுக்கப்பட்டதை வைத்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சொன்ன மாதிரி கீர்த்தி தாக்கபடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

 குறிப்பு:- மேற்கண்ட கடை அறநிலைய துறைக்கு சொந்தமான இடம் என்றும், குன்னத்தூரை சேர்ந்த குமார் என்பவர் அதை பிடித்து வைத்து இப்படி உள்வாடகை விட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த கடையை தான் ராணுவ வீரர் குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்து அதில் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

 இந்நிலையில் ஒரு முக்கிய பிரமுகரின் மகள் கீர்த்தியைப் போலவே பேன்சி கடை வைக்க விருப்பப்பட்டதால் கீர்த்தியின் கடையை காலி செய்து கொடுக்க ஏற்பாடானது.

 போளூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.வி.சேகர், திமுகவைச் சேர்ந்த துரை மாமுது ஆகியோர் இதற்கான பஞ்சாயத்தை  செய்திருக்கிறார்கள்.

  கீர்த்தி கடையை காலி செய்து கொண்டு போக சுமார் 9 லட்சம் ரூபாய் பேசப்பட்டு தொகை கைமாறியதும் அக்ரிமென்ட் போட்டு கொடுத்துள்ளார்.

  அக்ரிமென்ட்படி கீர்த்தி காலி செய்து கொடுக்காததாலேயே இந்த பிரச்சனை வெடித்துள்ளது. அந்த இடத்தை வாடகை விட்டுக் கொண்டிருக்கும் குமார் என்பவரின் மகன் ராமுவை கீர்த்தியின் தம்பி உள்ளிட்டவர்கள் தாக்கியதாலேயே, அடிதடி கும்பல் சேர்ந்து கீர்த்தியின் கடையை வலுகட்டாயமாக காலி செய்து, கடைக்கு முன் ஜல்லி கொட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.