வீட்டு மனையை கையகப்படுத்தாதீங்க! விவசாயி கண்ணீர் கடிதம்!!

 அ.பிலால்,  

 எங்க வீட்டுமனையை கையகபடுத்தாதீங்க என்று கோரி, விவசாயி ஒருவர் அரசு அதிகாரிகள் முதல் அரசாட்சி செய்யும் முதல்வர் வரைக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.

இது பற்றின விவரம் வருமாறு,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதி, உசேன்புரா தெருவில் வசிப்பவர் விவசாயி அஸ்லம் பாஷா. இவர் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அவர் வசிக்கும் வீட்டு அருகில் வசித்து வந்த முமேஸ் பேகம் என்பவரிடம் இருந்து 2860 சதுர அடி கொண்ட வீட்டு மனையை அவரது மனைவி பர்வீன் பெயரில் கிரையம் பெற்றார்.

 அதற்காக வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார். மேலும் உதயேந்திரம் பேரூராட்சி சர்வே எண் 615/25ல் இவை பதிவாகியுள்ளது.

 இந்நிலையில் அவர் பலமுறை அந்த இடத்திற்கு பட்டா வேண்டி விண்ணப்பித்தும் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

 இது குறித்து அஸ்லம்பாஷா குறுகையில் கடந்த சில தினங்களுக்கு முன், மேற்படி வீட்டு மனை இடத்தை சில அரசு அலுவலர்கள் வந்து பார்வையிட்டுவிட்டு சென்றனர்.

 விசாரித்த போது கிராம நிர்வாக அலுவலர் அமலா மற்றும் வார்டு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின் பெயரில் அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக இடத்தை பார்வையிட்டு சென்றுள்ளதாக தெரிய வந்தது. என்றார்.

  எனவே நான் கிராம நிர்வாக அலுவலரிடம் நேரில் சென்று கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் என்னை அவமானப்படுத்தி வெளியில் அனுப்பினர்.

  இதனால் அவர் மனம் உடைந்த நான் எங்களுடைய வீட்டுமனையை மீட்டு தர கோரி முதலமைச்சர் தனிப்பிரிவு,  மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் உள்ளிட்டோருக்கு புகார் மனுக்கள் அனுப்பியிருக்கிறேன்.

  அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் வாக்கு பெறுவதற்காக பல வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். குறிப்பாக புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வாங்கித் தருவதாக கூறி வாக்குகளை பெறுகின்றனர். வெற்றி பெற்று பதவிக்கு வந்த பின்னர் அதிகாரிகளுக்கு கையில் போட்டு பட்டா இடத்தை கூட புறம்போக்கு என்று கூறி வம்படிக்கிறார்கள்.

   இதுபோன்ற அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களால் நல்லாட்சிக்கு அவப்பெயர் ஏற்பாடுகின்றது. ஆகையால் அரசு உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட எனக்கு நீதி வழங்கி மேற்படி எங்கள் வீட்டுமனைக்கு பட்டா வழங்குவதோடு அதை கையகப்படுத்த முயல்வதை கைவிட வேண்டும் என்றார்.