ஒரே பாலம்...நான்கு ஆண்டுகள் போராட்டம்! சூப்பர் நிர்வாகம்!

ஒரே பாலம்...நான்கு ஆண்டுகள் போராட்டம்! சூப்பர் நிர்வாகம்!

ஜி.கே.சேகரன்,

நான்கு வருடங்களுக்கு முன்பு உடைந்து விழுந்த தரைப்பாலம் சீர்  செய்து  தர பொதுமக்கள் கோரிக்கை

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த அவ்வை நகர் சின்னையா மேஸ்திரி தோட்டம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு ஒரு தரைப்பாலம் இருந்தது.

 அப்படியிருக்க கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக கதிரிமங்கலம் ஏரி நிரம்பி வெளியேறிய நீரின் காரணமாக இப்பகுதியில் உள்ள தரைப்பாலும் உடைந்து கீழே விழுந்தது.

 இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் பொது மக்கள் மட்டும் இன்றி பள்ளி மாணவ மாணவிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  மேலும் கடந்த நான்கு வருட காலமாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் அளித்துள்ளனர்.

 ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். எனவே எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் உடைந்து விழுந்த தரைப்பாலத்தை சீர் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.