ரகசியமாக நடந்த ஜமாபந்தி! ரவுண்டு கட்டிய ஆம்பூர் மக்கள்!

ரகசியமாக நடந்த ஜமாபந்தி! ரவுண்டு கட்டிய ஆம்பூர் மக்கள்!

ஜி.கே.சேகரன்,

ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 14 34  ஆண்டின் பசலி வருவாய்

 தீர்வாயம் ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். அப்போது பொதுமக்களுக்கும் அதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய்  தீர்வாய அலுவலர்  நாராயணன் அவர்கள் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

 1434 ஆண்டின் பசலி வருவாய் தீர்வாயம் மூலம் நடைபெற்ற இதில் பொது மக்களின் மனுக்கள் பெறப்பட்டன.   நேற்று, 14 கிராமங்கள் அடங்கிய ஆம்பூர் சான்றோர் குப்பம் பெரியாங்குப்பம் நாச்சியார் குப்பம் மின்னூர் விண்ணமங்கலம் ஆலங்குப்பம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்கள் நிலப்பட்டா வீட்டு மனை பட்டா புதிய குடும்ப அட்டை ஓய்வூதியம் மனுக்கள் பெறப்பட்டன.

   இதில் ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த ஜமாபந்தி கூட்டம் பற்றி  பொது மக்களுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.  ஆகவே அங்கு திரண்ட பயணாளிகள் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  பின்னர் புதிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறிய தொடர்ந்து கூட்டம் கலந்து சென்றனர்.