நவம்பர் 21-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

நவம்பர் 21-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

 ஜி.சாந்தகுமார்,

   நவம்பர் 21-ம் தேதி அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

   அ.தி.மு.க. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் 21.11.2023 மாலை 4 மணிக்கு, பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

   இக்கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள்; மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.