மருத்துவர் பேச்சை கேட்காததால் பிரசவத்தில் தாய் பலி!

ஜி.கே.சேகரன்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாவடியூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ரமேஷ் (28) ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறா£. இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாது மகள் ஹேமலதா என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இரண்டு வயதில் மெய்யழகன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இரண்டாவது கருதரித்த ஹேமலதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போது அவருக்கு வயிற்று வலி அதிகமாக கொரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக வந்துள்ளார் அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது பிரசவ வலி என்றும், மேலும் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி விடுங்கள் என கூறியுள்ளனர்.
ஆனால் ஹேமலதா மருத்துவமனையில் அனுமதி பெறாமல் வீட்டிற்கு சென்றுள்ளனர் இதன் காரணமாக ஹேமலதாவிற்கு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்சில் இருந்த அவசர மருத்துவ உதவியாளர்கள் ஹேமலதாவுக்கு ஆரம்பக்கட்ட மருத்துவ உதவி செய்தனர்.
மேலும், 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளர்களிடம் அருகிலுள்ள கொரட்டி மருத்துவமனைக்கு செல்லாமல் முதல் பிரசவம் ஆன குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் நடந்தது எனவே அங்கு செல்லுங்கள் எனக் கூறியதன் காரணமாக அங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு ஹேமலதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது எனவே திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஹேமலதா உயிரிழந்தார்.
மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க கூறியும் கர்ப்பிணி பெண் வீட்டிற்கு சென்று வீட்டிலேயே பிரசவம் ஆகி அதிக ரத்தப் போக்கின் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.