டிசி நிலங்களை மீட்க அல்வா கொடுக்கும் அதிகாரிகள்!

டி.இ.இர்பான்,
சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்காக அளிக்கப்பட்டுள்ள டிசி லேண்டுகளை ஆதிக்க சாதியினர் அனுபவித்துக் கொண்டு வரும் நிலையில் அதை மீட்க பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டம் நடத்த முற்படும் போதெல்லாம் அதிகாரிகள் டெம்ப்ரவரியாக சமரசம் செய்து அல்வா கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பத்தாவது முறையாக சமூக சமத்துவப் படை கட்சியின் சார்பாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு D.C Land நிலத் தில் ஏர் உழும் போராட்டம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது போராட்டத்தை கைவிடக் கோரி வருவாய் கோட்ட அலுவலர் அவர்கள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்
சமூக சமத்துவ படை கட்சியின் மாவட்ட செயலாளர் பொன். குணசீலன் மற்றும் தலைவர்,S.வினோத் குமார் மாவட்டத் துணைச் செயலாளர்,S. கார்த்திக் நகரச் செயலாளர், முல்லை ஆஜி ஒன்றிய செயலாளர்,R. செந்தில்குமார் நகரத் தலைவர்,P. சங்கர்கணேஷ் ஒன்றிய இளைஞரணி தலைவர்,D.யாகதேவ் ஒன்றிய இளைஞரணி செயலாளர், S.R தென்றல், Bபிரபாகரன் S. மனோகரன் J.மணி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், தீபாவளி விடுமுறைக்குப் பிறகு கிராம வாரியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
குறிப்பாக பேரணாம்பட்டு வட்டத்தில் விதிமுறைகளை மீறிD.C நிலங்களை ஆக்கிர மித்துள்ள நபர்களிடம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் விசாரணை நடத்தப்படும் என்றும் இந்த விசாரணையின் முடிவில் இறுதி உத்தரவு குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் பிறப்பிக்கப்படும்என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையில் தற்போதைய D.C நிலம் ஆக்கிரமிப்புதாரர்கள் இருந்து அந்த D.C நிலத்தை தலித் மக்களிடமே ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.
*விசாரணை நடைபெறும் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் விஏஓ கிராம கணக்குகளுடன்
*மேலும் அந்த நாட்களில் விசாரணை நடைபெறுகிறதா அந்த விசாரணை தொடர்பான கடிதம் சமூக சமத்துவ படை கட்சியின் மாவட்ட செயலாளர் திரு பொன் குணசீலன் என்பவருக்கு தகவலுக்காக வழங்கப்படும்.
இந்த அமைதி கூட்டத்தின் எடுக்கப்பட்ட விவரங்கள் பின் வருமாறு,
1. மாச்சம் பட்டு
2.பாலூர்
3.மிட்டப்பல்லி
4.பக்காலபல்லி
5.பத்தலபல்லி
6.டி.டி மேட்டூர்
7.பல்லலகுப்பம்
8.அரவட்லா
என்ற வரிசையில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது