பாழடைந்த கட்டிடத்தில் அங்கன்வாடி!

கு.அசோக்,

பாழடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்பாமல் வீட்டிலேயே பெற்றோர்கள்நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், அங்கன்வாடி கட்டிடத்தின் மேல் தளம் சிதிலமடைந்து விழுந்து வருவதால் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டு.

 இராணிப்பேட்டை, மாவட்டம், திமிரி அடுத்த ஆனைமல்லூர் கிராம பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

  இந்த நிலையில் அங்கன்வாடி மையத்தின் மேல் தளம் முற்றிலுமாக சிதிலமடைந்து இடிந்து விழுந்து உள்ளது. இதனை கண்ட பெற்றோர்கள் உறுதியற்ற நிலைமையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பாமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

 மேலும் குழந்தைகள் பயிலுகின்ற அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். அதுவரையில் எங்கள் பிள்ளைகளை வேறு இடத்தில் படிக்க வைக்க வேண்டும் என்று கோருகின்றனர்.