துரைமுருகனை ஏமாற்றிய அதிகாரிகள்!நீச்சல் குளத்தை பார்வையிட்டஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

துரைமுருகனை ஏமாற்றிய அதிகாரிகள்!நீச்சல் குளத்தை பார்வையிட்டஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஜி.கே. சேகரன்,

வேலூர் விளையாட்டரங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு அமைச்சர் துரைமுருகன் நீச்சல் குளத்தில் தண்ணீர் காய்ந்து போய் இருந்த நிலையில் டிராக்டரை கொண்டு வந்து நிரப்பியது யார் என கடிந்து கொண்டார் 

  வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டரங்கம் உள்ளது இது சரியாக பராமரிக்கபடாமல் கட்டப்பட்ட நீச்சல் குளம் இதுவரையில் பயன்பாட்டு வராது இருந்த நிலையில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கடந்த வாரம் ஆய்வு செய்து விளையாட்டு துறை அமைச்சரை ஆய்வுக்கு அழைத்து வந்து தேவையான நிதிகளை பெறலாம் என கூறி சென்றார்.

இந்த நிலையில் இன்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் அழைத்து வந்து நீச்சல் குளம் விளையாட்டு அரங்கு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர் முன்னதாக அமைச்சர் துரைமுருகன் காய்ந்து போன நீச்சல் குளத்தில் தண்ணீரை நிரப்பியது யார் என அதிகாரிகளை கடிந்து கொண்டதுடன் மேலும் தமிழ்நாட்டிலேயே செயல்படாத விளையாட்டரங்கு என்றும் எல்லா வசதி இருந்தும் இது பராமரிகபடவில்லை என அதிகாரிகளிடம் கூறி தற்போது இதற்கு எவ்வளவு தொகை தேவை என அமைச்சர் துரை முருகன் கேட்ட போது அவர்கள் திட்டமதிப்பீடு ஒன்றை காட்டினார்கள் அப்போது திட்ட மதிப்பீட்டில் அவ்வளவு தொகை வராது உங்களுக்கும் சேர்த்து தொகை போட்டுகொண்டீர்களா என கேட்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் ஏவா வேலு மற்றும் செஞ்சி மஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.