என்.சி.சி.யில் சேர பெற்றோர்களின் கடிதம் கட்டாயம் தேவை! பெண் பிள்ளைகளுக்கு பெண் ஆசிரியர் தான் நியமிக்க வேண்டும்! ஆட்சியர் அதிரடி உத்தரவு!

ஆர்.ரமேஷ்,
NSS, NCC, Scout & Guide மற்றும் JRC போன்ற அமைப்புகளை பள்ளிகளில் செயல்வடுத்துதல் முறையாக அனுமதி பெறுதல் குறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்இ.ஆ.ப.இ அவர்கள் தெரிவித்ததாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மெட்ரிகுலேசன்இ சிபிஎஸ்சி உள்ளிட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகளில் NSS, NCC, Scout & Guide மற்றும் JRC போன்ற அமைப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.
அவ்வாறான அமைப்புகளின் செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் அமைப்புகளின் செயல்பாடுகளை செயல்படுத்த மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளியில் இருத்தல் வேண்டும். மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது.
மேற்கண்ட அமைப்புகளின் வாயிலாக மாணவ/மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும்- மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.
இவ்வமைப்புகள் சார்ந்த அனைத்து செயல்பாடுகளும், மாநில அமைப்பால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே பயிற்சி முகாம் நடத்தப்பட வேண்டும்.
மேற்கண்ட அமைப்புக்களின் செயல்பாடுகள் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் முகாம்கள் நடத்தப்படும் போது. உரிய அமைப்பைச் சார்ந்த ((NSS, NCC, Scout & Guide மற்றும் JRC)) மாவட்ட/ மாநில பொறுப்பாளரின் கடிதத்தின் அடிப்படையில் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு (தனியார் பள்ளிகள்) அனுப்பி ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
மாவட்ட/ மாநிலப் பொறுப்பாளர்கள் மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதி இல்லாமல் எந்தவொரு முகாமும்ஃபயிற்சியும் நடத்த ஏற்பாடு செய்யக் கூடாது.
பள்ளி அளவிலோ, மாவட்ட மற்றும் மாநில அளவிலோ முகாம்கள் நடத்தப்படும் போது மாணவர்கள் பாதுகாப்பிற்கு ஆண் ஆசிரியர்களும், மாணவியர்கள் பாதுகாப்பிற்கு பெண் ஆசிரியர்களும் சார்ந்த அமைப்பின் விதிமுறைகளின்படி போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களின் பாதுகாப்பின்றி எந்தவொரு அமைப்பு சார்பாகவும் மாணவ, மாணவியர்களை முகாம்களில் ஈடுபடுத்தக்கூடாது.
மேலும், பயிலும் பள்ளியிலோ அல்லது வெளியிடங்களிலோ முகாம் நடத்தப்பட வேண்டியிருப்பின். ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பொற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறப்பட்டு அதன் பிறகே மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
மேலும், பெற்றோர்கள் மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதியின்றி மாணவ/ மாணவியரை முகாம்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்பதை அணைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இச்செயல்முறைகளை அனைத்துவகைத் தனியார் சுயநிதிப் பள்ளிகளும் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்இஇ.ஆ.ப.இ அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் திரு.முனிசுப்ராயன், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், காவல் துறை அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்இ திருப்பத்தூர் மாவட்டம்.