தமிழக அரசின் அனுமதி  இல்லாமல் எந்த காலத்திலும் மேகதாது அணை கட்ட முடியாது! அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்!!

 தமிழக அரசின் அனுமதி  இல்லாமல்   எந்த காலத்திலும்  மேகதாது  அணை கட்ட முடியாது! அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்!!

G.Ashoke,

காவேரி ஆற்றில் மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக மாநில அரசு நிதியினை ஒதுக்கலாம் கமிட்டிகளை அமைக்கலாம் வேகமாக பேசி வரலாம் ஆனால் தமிழக அரசின் அனுமதி  இல்லாமல் மேகதாது அணையில் எந்த காலத்திலும் அணை கட்ட முடியாது எனவும் அதுதான் சட்டம் அதுதான் நீயதி எனவும் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதில் எங்களுக்கு கவலை இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்

 ராணிப்பேட்டை மாவட்டம்ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் பகுதியில் அரசு நிதி உதவி பள்ளியின் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றதுஇது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆகியோர் பங்கேற்று அரசு நிதி உதவி பள்ளியில் கட்டடத்தினை திறந்து வைத்து குத்து விளக்கினை ஏற்றினர்மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்இதனை தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டபோது தெரிவித்ததாவதுகாவேரி ஆற்றில் மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக மாநில அரசு நிதியினை ஒதுக்கலாம் கமிட்டிகளை அமைக்கலாம் வேகமாக பேசி வரலாம் ஆனால் தமிழக அரசின் பர்மிஷன் இல்லாமல் மேகதாது அணையில் எந்த காலத்திலும் அணை கட்ட முடியாது எனவும் அதுதான் சட்டம் அதுதான் நீயதி எனவும் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதில் எங்களுக்கு கவலை இல்லை என தெரிவித்தார்

 

திராவிட மாடல் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதற்கு அவர் மிகப்பெரிய ஆள் என நகைச்சுவையாக தெரிவித்தார்.