எடப்பாடியார் அனுப்பிய வக்கீல் நோட்டிசு! முரசு டிவி நெறியாளருக்கு 48 மணி நேரம் கெடு!

ம.பா.கெஜராஜ்,
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது, அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்.
தற்போது அது தொடர்பாக உண்மைக்கு மாறாக தகவல்கள் வெளியிட்டதாக கூறி, தனியார் தொலைக்காட்சி நெறியாளர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரி அவருக்கு,ர் எடப்பாடி பழனிசாமி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தமிழக முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் துபாய் சென்றனர். அரசு முறை பயணத்தில் முதல்வர் குடும்ப உறுப்பினர்களை அழைத்து சென்றது குறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
அப்படியிருக்க இது குறித்து மாலை முரசு தொலைக்காட்சியில் ( மார்ச் 30) நடைபெற்ற விவாதத்தில் வெளிநாடு சென்றபோது அவுரும் குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் சென்றதாக சொல்லப்பட்டது.
இந்த தகவல் உண்மைக்கு மாறானது என்றும், இதற்காக சம்பந்தப்பட்ட டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்னிடம் 48 மணி நேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.