வெங்கடாபுரம் தீர்த்தகிரிமலையில் மலேசியா முருகர்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் அருகே மலை மீது அமைக்கப்பட்டுள்ள 92 அடி உயரமுள்ள முருகர் சிலைக்கு வரும் ஜுன் 8 ஆம் தேதி மஹாகும்பாபிஷேகம் நடத்த ஆலோசனை கூட்டம் ஏ ற்பாடு செய்யப்பட்டது.
வேலூர்மாவட்டம், வேலூர் அருகேயுள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் தீர்த்தகிரி மலையின் மீது சுமார் 92 அடி உயரமுள்ள தீர்த்தகிரி முருகன் சிலை புதியதாக கடந்த 2 ஆண்டுகளாக அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது.
மலேசியாவில் உள்ளதை போல் இந்த முருகர் சிலை தீர்த்தகிரியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தீர்த்தகிரி முருகன் ஆலயத்தில் ஜுன் 8 ஆம் தேதி மிகப்பிரம்மாண்டமாக கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆலயம் மலை மீது உள்ளதால் பிரச்சனைகள் இன்றி மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள முழுமையாக ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.
இதில் அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட கிராம மக்கள் திரளானோர் கலந்துகொண்டு தீர்த்தகிரி முருகர் மஹா கும்பாபிஷேகம் குறித்து பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்கள்.