அரசியல்வாதிகளுக்கு நாற்காளி! பொதுமக்களுக்கு தரையா! மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்!

  ஜி.கே.சேகரன்,

 கரைவேட்டிகாரர்களுக்கு நாற்காளி போட்டு அமரவைக்கும் மாவட்ட நிர்வாகம், அதே புகார் அளிக்க வரும் பொதுமக்களை தரையில் அமரவைத்து டார்ச்சர் செய்திருக்கிறார்கள்.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அரங்கில் அரசியல் பிரமுகர்களுக்கு மட்டும் இருக்கை கொடுத்து மிச்சர் பிஸ்கோத்து எல்லாம் கொடுத்து திண்ண வைத்து அழகு பார்க்கிறார்கள்.

  ஆனால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்த பொதுமக்களை நீண்ட நேரம் தரையில் அமர வைத்து காத்திருக்க செய்து டார்ச்சர் செய்த் இருக்கிறார்கள்.

 இதனால் அங்கு  சலசலப்பு ஏற்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைத்தும் அதை அளந்து கொடுக்க துறை சார்ந்த அதிகாரிகள் நீண்டநாட்களாக வரவில்லை.

  அது குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க  வந்த சுமார் 40க்கும் மேற்பட்டவர்களை கூடுதல் அரங்கத்திற்கு வெளியே தரையில் அமர்ந்திருந்தனர்.

 அதே இடத்தில் மாவட்ட ஒன்றிய குழு தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அங்கு வந்த அரசியல்வாதிகளுக்கு மட்டும் இருக்கைகள்  கொடுத்து அமரவைத்தனர்.

  அந்த அரசியல்வாதிகளோ, தரையில் அமரவைக்கப்பட்டிருந்த பொதுமக்களை பார்க்க வைத்தபடியே சினேக்ஸ்ஸை அசைபோட்டுக் கொண்டிருந்தனர்.

 ஆஹா... தேர்ந்தெடுத்தவர்கள் தரையில், தேர்வானவர்கள் நாற்காளியில்?   இதுபோன்ற ஏற்றத்தாழ்வுள்ள சம்பவங்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

  இதைக் கூடவா கண்டுகொள்ள மாட்டார் மாவட்ட ஆட்சியர் என்கிற கேள்விகளை  பலர் முன் வைக்கிறார்கள்.

இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட உள்ளதாம்.