பெண்களே படியுங்கள்! மாவட்ட ஆட்சியர் அட்வைஸ்!

ஜி.கே.சேகரன்,
மேல்அச்சமங்கலம் கிராமத்தில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் பங்கேற்று அதிக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என பேச்சு.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மேல் அச்சமங்கலம் கிராமத்தில் மே1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.
இதில மேல் அச்சமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை வைத்தனர்.
அதில் தங்கள் பகுதிக்கு நியாய விலை கடை அமைக்க வேண்டும், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் கோரிக்க வைத்தனர்.
அப்போது சிலர் தங்கள் இதுவரை இந்த பகுதியில் வாழ்ந்து வருகிறோம் எங்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைப்பதில் சிரமம் உள்ளது எனவே விவசாயிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் தகுதியான நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
மேலும் பெண்கள் நன்றாக படிக்க வேண்டும் நன்றாக படித்ததன் காரணமாக தான் நான் தற்போது அரசு வேலையில் உள்ளேன். நீங்களும் அது போல் படித்து அரசு வேலைக்கு வர வேண்டும் எனவும் பெண்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.