வெறிபிடித்த மௌலானா மசூத் அசார்!

வெறிபிடித்த மௌலானா மசூத் அசார்!

ம.பா.கெஜராஜ்,

 ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் ஏப்.22ம் தேதி நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணம் பயங்கரவாதி மௌலானா மசூத் அசார்.

 தார் பாலைவனத்தின் குறுக்கே ராஜஸ்தான் எல்லையை எதிர்கொள்ளும் பஹவல்பூர், மௌலானா மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகமதுவின் கோட்டையாக இருந்து வருகிறது, 1999 டிசம்பரில் ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு கடத்தப்பட்ட இந்தியன் ஏர் லைன்ஸ் விமானம் ஐசி -814 இன் பயணிகளுக்கு ஈடாக இந்தியாவால் மாற்றப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவர் தான் இந்த மசூத்.

குட்டையாகவும் தொப்பை போட்டவராக காணப்படும் அவர் கண்பார்வையை இழந்துவிட்டதாகவும், உயிரிழந்துவிட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு.

ஆனால் அவர் இதுவரை இறக்கவில்லை. 

தற்போது இந்தியா நடத்திய ட்ரோன் தற்கொலை தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பி இருக்கிறார் ஆனால் அவரது மூத்த சகோதரி மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட பத்து உறவினர்கள் கொல்லப்பட்டனர்.

 1968 ஆம் ஆண்டில் மசூத் அசார் பிறந்த நகரம் பஹவல்பூர், 1988 ஆம் ஆண்டில் விமான விபத்தில் பாகிஸ்தானின் சர்வாதிகாரி ஜியா-உல்-ஹக் இறந்த இடம்.

 இவருக்காக கடத்தப்பட்ட இந்தியர்களில் தமிழ்நாடு வேலூரைச் சேர்ந்தவர்கள் அதிகம்.

 

 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்

பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. அதன் பட்டியல்:

  1. மர்கஸ் சுபான் அல்லாஹ், பஹவல்பூர் ஜெய்ஷ்-இ-முகமது
  2. மார்கஸ் தைபா, முரிட்கே - லஷ்கர் இ தொய்பா
  3. சர்ஜல், தெஹ்ரா கலன் - ஜெய்ஷ் இ முகமது
  4. மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் - எச்.எம்.
  5. மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா ௹ லஷ்கர் இ தொய்பா
  6. மர்கஸ் அப்பாஸ், கோட்லி - ஜெய்ஷ் இ முகமது
  7. மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி - எச்.எம்.
  8. ஷவாய் நல்லா முகாம், முசாபராபாத் - லஷ்கர்-இ-தொய்பா
  9. சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் ஜெ.எம்.