பிரியாணிக்காக குறைந்த விலைக்கு விற்கப்படும் நோய் வந்த கால் நடைகள்!

பிரியாணிக்காக குறைந்த விலைக்கு விற்கப்படும் நோய் வந்த கால் நடைகள்!

 கு.அசோக்,

  கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் பெரிய அம்மை நோய்- மண்டல இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆய்வு

   வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மாடுகளுக்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டு வேகமாக பரவி வருவதால் கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர்.

   குடியாத்தம் பகுதியில் பசு, காளை மாடுகளுக்கு, தலை, கழுத்து, மற்றும் உடல் பகுதியில் திடீரென உருளை உருளையாக கட்டிகள் ஏற்படுகின்றன.

   இதனால் மாடுகள் உடல்நிலை பாதிப்படைகிறது. லிங்குன்றம், அக்ரஹாரம், கிராமங்களில் இந்த தாக்கம் அதிகமாக உள்ளது. இது ஒரு வகை பெரிய அம்மை தொற்று என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் இது குறித்து தகவல் அறிந்து வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினர் குடியாத்தம் பகுதியில் அம்மை நோய் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளை நேரில் சென்று ஆய்வு செய்து பரிசோதனை செய்தனர்.

  மேலும் ரத்தம் மற்றும் தோல் ஆகியவை சேகரித்து சென்னை மத்திய பல்கலைக்கழக ஆய்வகத்திற்கும், போபாலில் உள்ள  தேசிய கால் நடை ஆய்வகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

   பின்னர் அம்மை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதை குறித்து விவசாயிகளுக்கு மாடு உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

   கால்நடை மருந்தகத்தில் இதற்கான தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் மேலும் அம்மைய நோயில் பாதிக்கப்பட்ட மாடுகளை தனியாக கட்டி வைக்க வேண்டும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

  இந்நிலையில் இப்படி நோய்வாய்ப்படும் மாடுகளை இறைச்சிக்காக குறைந்த விலையில் விற்றுவிடுகிறார்களாம். அவற்றை வாங்கிச் செல்லும் சுற்றுபுற வியாபாரிகள் பீப் பிரியாணி விற்பனையை அமோகமாக செய்து வருகிறார்களாம்.

  இது குறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில் அப்படி நோய் பட்ட கால் நடையின் இறைச்சியை உணவுக்காக பயன்படுத்துவது ஆரோக்யமானது கிடையாது என்கிறார்.