43 விவசாயிகளுக்கு யந்திரங்கள்! ஆட்சியர் கொடுத்தார்!!

43 விவசாயிகளுக்கு யந்திரங்கள்! ஆட்சியர் கொடுத்தார்!!

டி.இ.முகமது,

யந்திரங்களை கொண்டு உழவுப்பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, 35 கோடி ரூபாய் மானியத்தில் 3,907 விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் 293 விவசாயிகளுக்கு விசை களையெடுப்பான் கருவிகள், என மொத்தம் 4200 விவசாயிகளுக்கு இக்கருவிகளை வழங்கிடும் விதமாக மூன்று விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் விசை களையெடுப்பான் கருவிகளுக்கான ஆணைகளை  வழங்கினார்.

  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமாக்குதல் (2023 -24)  43 பவர் டிரில்லர் மற்றும் பவர் வீடர் ஆகிய வேளாண் இயந்திரங்கள் ரூ.32.50 இலட்சம் மானியத்தில், ரூ.78.25 இலட்சம் மதிப்பிலான இயந்திரங்களை 43 விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப, அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பிஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.

 இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் (பொ) திரு.இராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.என்.கே.ஆர்.சூரியகுமார், துணை இயக்குனர்கள் (வேளாண்மை) திரு.பச்சையப்பன், (தோட்டக்கலை) திருமதி.தீபா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் திரு.ஆனந்தன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொறியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.