புறாக்களை பறக்கவிட்ட ஆட்சியர் - எஸ்.பி.!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலையார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் காவல் துறையினரின் சிறப்பான அணிவகுப்பை மரியாதையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ஏற்றுக் கொண்டு, மூவர்ண்ண பலூன்களையும், சமாதான புறாவையும் பறக்க விட்டனர்.
மேலும் சிறப்பாக பணியாற்றிய 27 காவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சாலை விபத்து குறித்தும் கட்டுரைப் போட்டிகள் நடந்தது அதில் வெற்றி பெற்ற முதல் முதல் மூன்று மாணவர்களான தீபிகா, ராகுல், வாகித்கான், ஆகிய 3 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் 102 பயணிகளுக்கு 33 லட்சத்து 2ஆயிரத்து 216 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.