எம் .எல் .ஏ. ஆபிசில் இலவச இ- சேவை மையம்!

கு.அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இசேவை மையத்தை கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.ஆர்.காந்தி அவர்கள் இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்இலவச இ-சேவை மையத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அப்போது ஏற்கனவே சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்த நபர்களுக்கு வருவாய்த்துறையினர் அங்கீகரித்த சான்றிதழ்களை இலவச இ- சேவை மையத்தில் வழங்கினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் .மனோன்மணியம் நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத் ஹரிணி தில்லை முஹமது ஹமீன் ஒன்றியக் குழுத் தலைவர் சே.வெங்கட்ரமணன், தி ஜிகே உலகப்பள்ளி மேலாண்மை இயக்குநர் வினோத் காந்தி மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளனர்.