பப்பியை காணோம்!. கண்டுபிடிச்சு கொடுங்கள்! காவல் நிலையத்தில் நாய் குட்டி உரிமையாளர் புகார்!.

 ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, ரயில்வே குடியிருப்பு முதல் தெருவில் வசிக்கும் ரயில்வே ஊழியர் அசோகன் (55) என்பவர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு வித்தியாசமான புகார் அளித்தார்.

  எனது நாய்குட்டியும், என் பாப்பாவும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது என்னுடைய நாய்க்குட்டி பப்பி ரோட்டிற்கு சென்றுள்ளது. பாப்பா என்னை அழைத்து வர என்னிடம் வந்தபோது ரோட்டில் இருந்து நாய்க்குட்டியை ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தில் திருடி சென்றுள்ளனர்.

 எனவே எனது நாய்க்குட்டியை மீட்டுக் கொடுங்கள் என்று அந்த புகாரில்¢ தெரிவித்துள்ளார்.

 புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் நாய்க்குட்டியை திருடி சென்ற நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர். நாய் குட்டி காணவில்லை என்ற புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.