யானை தந்த வியாபாரிகளுக்கு நீதிமன்ற காவல்!

கு.அசோக்,
யானை தந்தத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற 9 பேர் கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வேலூர்மாவட்டம், அரியூரில் யானை தந்தம் விற்க இருப்பதாக வனத்துறையினருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து அரியூர் மலைக்கோடி பகுதியை சேர்ந்த சம்பத் (55 ) என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, 4 துண்டு யானை தந்தம், ஒரு யானை பல் இருந்ததை வன அலுவலர் புருஷோத்தமன் கைப்பற்றி தொடர் விசாரணை செய்தார்.
பின்னர், அந்த விற்பனை கும்பலை சேர்ந்த குமார் ( 44), திருவண்ணாமலை.,சரத்குமார் (33), (பாஜக இளைஞர் அணி முன்னாள் நிர்வாகி) , தனபால் (60 )மேல்ஆத்தூர், தூத்துக்குடி , தரணி குமார் (55) சத்துவாச்சாரி ,பழனி (65 ) சின்ன அல்லாபுரம், வேலூர். அனீஸ் (45), சின்ன அல்லாபுரம், வேலூர். ரவி (45), வாலாஜா,மணிகண்டன் வ - 30 அரியூர்9 பேரை கைது செய்தனர்.
இவர்களை பலத்த பாதுகாப்புடன் வனத்துறையினர் அழைத்து வந்து சத்துவாச்சாரியில் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஜே.எம் -1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.
3. பப்பியை காணோம்!.