கமலஹாசனை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டுமாம்! அண்ணாமலை பேச்சு பண்பற்றது என கண்டனம்!

உ.சசிகுமார்,
கமல்ஹாசனை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், அவருக்கு மநீம நிர்வாகி அருணாச்சலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், காந்தியின் பேரனாக வாழும் கமல்ஹாசனை பற்றி இப்படி பேசிய அண்ணாமலைக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு¢ கமஹ்ஹாசன், திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார். அவருக்கு திமுக ஒரு மாநிலங்களவை சீட்டை கொடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கமலஹாசனை பிரச்சாரம் செய்ய திமுக உபயோகப்படுத்தி வருகிறது.
அப்படியிருக்க கமல்ஹாசன் நேற்று முன்தினம் வடசென்னையில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், "மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து ஆர்எஸ்எஸ் அலுவலகம் அமைந்திருக்கும் நாக்பூருக்கு மாற்றப்படும்" என்று கூறினார்.
இதையடுத்து, கமலஹாசனின் இந்த பேச்சு குறித்து அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "கமல்ஹாசனை நல்ல மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதிக்க வேண்டும். அவருக்கு சிறுமுளையுயில் ஏதோ பிரச்சனை. இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு யாராவது மாற்ற முடியுமா? கமலின் மூளை செயல்படுகிறதா என்று பரிசோதிக்க வேண்டும்" என அவருது பாணியில் பேசினார்.
கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கூறிய அண்ணாமலைக்கு மக்கள் நீதி மைய்யத்தின் நிர்வாகி அருணாச்சலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், "பல கோடி இதயங்களில் எங்கள் தலைவர் கமல்ஹாசன், காந்தியின் பேரனாக வாழ்கிறார். அண்ணாமலை பேசிய பண்பாடற்ற வார்த்தைகளை எங்கள் தலைவர் மன்னித்தாலும், 140 இந்தியர்களும் உங்களை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்" எனத் குறிப்பிட்டிருக்கிறார்.