காசாவை ரவுண்டு கட்டிய இஸ்ரேல் ராணுவம்!

 காசாவை ரவுண்டு கட்டிய இஸ்ரேல் ராணுவம்!

  இ.யாக்கோபு,

  இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்திய ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. காசாவை சுற் றிலும் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்து ரவுண்டு கட்டி தாக்குதல் நடத்திவருகிறது.

  இந்நிலையில்  இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே உளவுதுறை மூலம் எகிப்து அதிபர் அப்தில் பசாத் சொன்னாராம், ஆனால் அதை இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நேத்தாயா மறுத்துள்ளார். மேலும் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதற்கு நாங்க ரொம்ப பிஸியாக போர் புரிந்துக் கொண்டிருக்கிறோம் என்று இஸ்ரால் எகிப்துக்கு பதில் கொடுத்துவிட்டு உண்மையிலேயே அவர்கள் போரில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

 இந்த போரில் ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான், சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுதங்களை தருவதாக தெரிவித்துள்ளது.

  அப்படியிருக்க காசா ௹ இஸ்ரேல் எல்லையில் சுமார் 1 லட்சம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது இஸ்ரேல். காசா முனைக்கு அருகே உள்ள இஸ்ரேலின் தெற்கு பகுதியான கர்மியா, அஷ்கிலோன், ட்ரோட் ஆகிய 3 நகரங்களில் ஏற்கனவே ஹமாஸ் - இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகிறது.

  இந்த போரில் இருதரப்பும் உள்ள பணய கைதிகளை பரஸ்பரம் திரும்பப்பெற கத்தார் நாடு மத்தியிசம் செய்து வருகிறது.