காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட " ஹாப்பி சண்டே மாரத்தான்!

ஜே.ஜே.ரபிக்ராஜா,
பெரியகுளத்தில் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட " ஹாப்பி சண்டே மாரத்தான் 2023" போட்டி: வெற்றி பெற்ற நபர்களுக்கு பெரிய குளம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் ஓ. சண்முகசுந்தரம் முதல் பரிசு வழங்கினார்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் அவர்களின் தலைமையில் பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கீதா ஏற்பாட்டில் பெரியகுளம் உட்கோட்ட காவல் துறை சார்பில் "ஹாப்பி சண்டே-2023"மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா இ.ஆ.ப.பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என சுமார் 850 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியகுளம் வீச்சுக் கருப்பணன் சுவாமி திருக்கோயிலில் ஆரம்பித்து சோத்துப்பாறை அணை நுழைவாயில் வரை சென்று மீண்டும் அங்கிருந்து வீச்சுக் கருப்பண சுவாமி கோவில் வந்தடைவதை இலக்காகக் கொண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற நபர்களுக்கு முதல் பரிசினை ஜெயம் ஹார்டுவேர்ஸ் உரிமையாளரும், பெரியகுளம் நகராட்சி 24வது வார்டு நகர்மன்ற உறுப்பினரும், அஇஅதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் குழு தலைவருமான ஓ. சண்முகசுந்தரம் அவர்கள் முதல் பரிசினை வழங்கி கௌரவித்தனார்.
மேலும் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு ஜெயம் ஹார்டுவேர்ஸ் சார்பில் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் இலவசமாக வழங்கப்பட்டது. பெரிய குளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி, தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிபாசு, தேவதானப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கஜேந்திரன் ஆகியோர் மாரத்தான் போட்டிக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர். பெரிய குளம் உட்கோட்ட காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், பெரியகுளம் நகராட்சி, பெரியகுளம் விளையாட்டு சங்கம், தன்னார்வலர்கள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.