தேமுதிக திமுகவை நெருங்குகிறதா டென்ஷனான பிரேமலதா விஜயகாந்த்!

கு.அசோக், 

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் சுவாமி தரிசனம்....இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு அலங்கார பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்.ஆண்டுதோறும் ஆலயத்திற்கு வருவது வழக்கம் மேலும் தங்களது கழகத்தாரை சந்தித்தது மகிழ்ச்சி என தெரிவித்தார்.

   உலகத்தில் பிரசித்தி பெற்ற இந்த திருத்தளத்தில் சாமி தரிசனம் செய்து சாமி ஆசீர்வாதம் பெற்றுவதற்காக வந்தார் என்று தெரிவித்துக் கொண்டார்.

   தொகுதியின் மறுவரை குறித்து கேட்டதற்கு 39 தொகுதியில் ஒரு தொகுதி குறைந்தால் கூட தேமுதிக ஒத்துழைக்காது.

   தேமுதிக திமுகவுடன் நெருங்கிய வருவதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு. பத்திரிக்கையாளர்கள் இதுபோன்று திரித்துக் கூறி வருவதாகவும் நாங்கள் கட்சி பணிகளை மேற்கொண்டு கட்சி வளர்ச்சிக்காக செயலாற்றி வருவதாகவும் சொன்னார்.

 மேலும் செய்தியாளர்கள் எழுதுவதற்கு நான் பதில் அளிக்க இயலாது என்று தெரிவித்தார்.

சென்னையில் ஒரே நாளில் அதிகரித்து வரும் வழிப்பறி கொள்ளை குறித்து கேட்டதற்கு சென்னை மட்டுமல்ல தமிழக முழுவதும் வழிபறி கொள்ளைகள் அதிகரித்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.

 எச்.ராஜா ஆணவ படுகொலை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு கருத்து கூறியதற்கு, இதை எச். ராஜாவிடம் தான் கேட்க வேண்டும் என்னிடத்தில் கேட்க வேண்டாம்,கருத்துக்   கூறுபவர்களிடமே கருத்து கேட்க வேண்டும்  என்றார்.

   2026 தேர்தல் குறித்து கேட்டதற்கு 2026 ஆண்டு வருவதற்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது அப்பொழுது செய்தியாளர்களை அழைத்து அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து தெரிவிப்பதாக தெரிவித்துக் கொண்டார்.

  முன்னதாக மாநில பொறியாளர் பிரிவைச் சேர்ந்த சி.ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பிரேமலதாவுக்கு சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.