பள்ளிக்கு போகாமல் கட் அடித்த மாணவர்கள்! இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசியின் கிடுக்கிபிடி விசாரணையில் நாடகம் அம்பலம்!

பள்ளிக்கு போகாமல் கட் அடித்த மாணவர்கள்! இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசியின் கிடுக்கிபிடி விசாரணையில் நாடகம் அம்பலம்!

ஜி.கே.சேகரன்,

நாட்றம்பள்ளி அருகே பள்ளிக்கு போகாமல் கட் அடித்தது மட்டுமில்லாமல், மர்ம நபர்கள் கடத்தி விட்டதாக போலீசாருக்கு  சாக்கு போக்கு காட்டி மாணவர்கள் நாடகம்! பெற்றோர்கள் அடிப்பார்கள் என பொய் கூறியதாக தகவல்.

  திருப்பத்தூர்மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பூபதி கவுண்டர் பகுதியை சேர்ந்தவர் கணபதி மகன் தர்ஷன்.  இவரும், எல்லப்பள்ளி அடுத்த ஜலியூர் வட்டம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் ரஞ்சித்தும் நாட்றம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை  ஒன்றாக படித்து வந்துள்ளனர்.

 இந்த நிலையில் தர்ஷன் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  அதனை தொடர்ந்து இருவரும் நேற்று ஒன்றாக சந்தித்தபோது இருவரும் பள்ளியை கட்டடித்துவிட்டு அவ்வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தில் லிப்ட் கேட்டு அக்ரஹரம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றனர்.

  அப்போது கோவில் அருகே வந்த நிலையில் டாடா ஏசி வாகன ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் இரண்டு மாணவர்களும் வாகனத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர்.

   அப்போது ரஞ்சித்துக்கு தலையில் காயமும் தர்ஷனுக்கு லேசான காயமும் ஏற்பட்டது ஏற்பட்டது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் இரு மாணவர்களிடம் விசாரிக்கையில் தங்களை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி விட்டதாக நாடகமாடி சாக்கு போக்கு காட்டினர்.

  பின்னர் தீவிர விசாரணையில் பள்ளியை கட் அடித்து விட்டு கோவிலுக்கு சென்றது பெற்றோர்களுக்கு தெரிய வந்தால் அடிப்பார்கள் என்ற காரணத்தால் மர்ம நபர்கள் கடத்தி விட்டதாக பொய் கூறினோம் என தகவல் தெரிவித்தனர்.இந்த கடத்தல் நாடகம் நாட்றம்பள்ளி காவல் துறையினருக்கு  தலைவலியை ஏற்படுத்திய நிலையில் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசியின் நீண்ட நேர கிடுக்குப்பிடி விசாரணைக்கு பிறகு மாணவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி பின்பு எச்சரித்து அனுப்பி வைத்தார்.