பல்லை இளிக்கும் சாலை!சீர் பண்ணுங்க ஆபிசர்ஸ்!

கு.அசோக்,
சோளிங்கர் அருகே சேதமடைந்துள்ள தார் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த வெங்குபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட எருமைபாளையம் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
இப்பகுதிக்கு எம்பி குப்பம் பகுதியில் இருந்து எருமைபாளையம் வரை சுமார் ஒன்னரை கிலோ மீட்டர் தூரம் வரை பல ஆண்டுகளுக்கு முன்பாக தார்சாலை அமைக்கப்பட்டது.
தற்போது இந்த தார்சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லி பெயர்ந்து வருகிறது. இக்கிராமத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் ,விவசாய உபகரணங்கள் விளை பொருட்கள் எடுத்துச் செல்லவும் பிரதான சாலையாக உள்ளது.
சாலை முழுதும் தார் ,ஜல்லி பெயர்ந்தும் கிராமத்திற்கு செல்ல சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வளைவுகள் உள்ளது .இந்த வளைவு பகுதியில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
ஜல்லி கற்கள் பெயர்நதுள்ளதால் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இரவு நேரங்களில் இருசக்கர வானகங்கள் விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், விவசாயகள் நலன் கருதி இந்த சாலையை உடனடியாக தார்சாலை மாற்றி தர வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.