தண்ணிரில் சோளிங்கர் எம்.எல்.ஏ!சாலைமறியல்!

ஜி.கே.சேகரன்,
கடந்த 25 ஆண்டுகள் கழித்து தங்களது ஏரி முழு கொள்ளளவை அடைந்து, ஏரியின் கரைகள் வலுவிழந்து உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாக வெளியேறுவதால் ஏரியை சரி செய்ய வலியுறுத்தி கரிக்கல் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் எடுத்த கரிக்கல் கிராமத்தில் ஏரியானது கடந்த 25 ஆண்டுகள் கழித்து நிரம்பி உள்ளது.
ஏரியின் மதகுகள், ஏறி கரைகள், ஏரி கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மற்றும் முறையான பராமரிப்பு செய்து தராமல் கிடப்பில் உள்ளதாகவும் இதனால் மக்கள் பல முறை பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு ஏரி பலப்படுத்த முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது நிரம்பியுள்ள ஏரியில் நீர் நிரம்பி ஏரி கோடி போவதாலும் மற்றும் ஏரியின் கரைகள் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நீர் வீணாக வெளியேறுவதால் தங்களது விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டித்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சோளிங்கர் அரக்கோணம் செல்லும் நெடுஞ்சாலை, கரிக்கல் பேருந்து நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் தொடர்பாக சோளிங்கர் காவல்துறையினர் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அரக்கோணம் சோளிங்கர் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எம். எல் .ஏ. ஆய்வு.
சோளிங்கர் அருகே நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்ததால் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதம் ஆனது.
இதனைத் தொடர்ந்து சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது இதில் சோளிங்கர் ஒன்றியத்துக்குட்பட்ட கொடைக்கல்,ரெண்டாடி ,தகரகுப்பம் , கோசவனாக்குப்பம்,பெருங்காஞ்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் வெள்ளப்பெருக்கால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் ,பூச்செடி, காய்கறி உள்ளிட்டவை சுமார் 500 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமானது.
தகவலறிந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் நேரில் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு விவசாயிகளிடம் சேதமான விவசாய நிலங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்து சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.