எஸ்.பி.யின் செயலைக் கண்டித்து தர்ணா செய்த இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர்!

எம்.ஏ.கண்ணன்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் மனுவினை வாங்க மறுத்து ஒருமையில்
பேசியாதாக புகார் கூறி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் நுழைவு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலியில் மள்ளர் பேராய குழுவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களையும், அக்கட்சியின் மாநில தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகிமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களையும், அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
மேலும் முக்குலத்தோர் சமுதாய மக்களை உண்மைக்கு புறம்பாக அவதூறாக பேசி வன்முறையை தூண்டி சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.
அப்படி பேசிய செந்தில்ராஜன் மீது சட்ட ரீதியான வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ள எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தனது கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்துள்ளார்.
அப்போது உள்ளே சென்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்திடம் புகார் மனுவினை கொடுக்க சென்றுள்ளனர்.
அப்போது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் மனுவினை ஏற்றுக்கொள்ள முடியாது அனைவரும் வெளியே செல்லுங்கள் என ஒருமையில் பேசியதாக கூறப்படுகின்றது.
எனவே கட்சி நிர்வாகிகளுடன் வந்திருந்த மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் நுழைவு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த இணை காவல் கண்காணிப்பாளர்
வினோஜி அவர்களுடன் சமாதானம் பேசியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.