திமுக மற்றும் திமுமுக சார்பில் இஃப்தார்!

 திமுக மற்றும் திமுமுக சார்பில் இஃப்தார்!

ஜி.கே.சேகரன்,

திமுக மற்றும் திமுமுக ஆகிய கட்சிகளின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது

   வேலூர்மாவட்டம்,வேலூரில் வேலூர் மாநகர திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவின் சார்பில் திமுக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

  சிறுபான்மை நல உரிமை பிரிவின் அமைப்பாளர் அப்துல் மஜீத், தலைவர் நவ்ஷாத்,வேலூர் மாநகராட்சியின் மேயர் சுஜாதா மற்றும் திரளான சிறுபான்மை மக்களும் திமுக நிர்வாகிகளும் இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

  இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருக்குர் ஆன் புத்தகம் ஒன்றும் இலவசமாக வழங்கப்பட்டது இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

வேலூரில்  சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திராவிட முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின்  சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி மற்றும் சேலைகள் வழங்கி இப்தார் நோன்பை திறந்து   ரம்ஜானை கொண்டாடினார்கள்

   அதே போல்  வேலூரில் திராவிட முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநில தலைவர் ஜி.எஸ்.இக்பால் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் நோன்பு கஞ்சி பழங்கள் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் சேலைகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது.

  இதில் திமுக அவைத் தலைவர் முகமது சகி உள்ளிட்டோரும் மற்றும் கிறிஸ்தவ மத பெரியவர்களும் மற்றும் அப்பாஜி சுவாமிகள் மற்றும் பகவதி சித்தர் சுவாமிகள் உள்ளிட்டோரும் சமூக நல்லிணக்கத்துடன் கலந்துகொண்டனர்.

இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மக்கள் எந்த பாகுபாடுமில்லாமல் சகோதரத்துவதுடன் கலந்துகொண்டனர். நோன்பு கஞ்சி உண்டும் பழங்களை உண்டும் நோன்பினை திறந்தனர்.

 பின்னர் இதில் பங்கேற்ற ஏழை மக்களுக்கு பிரியாணி உணவு பொட்டலங்கள் மற்றும் சேலைகளும் இலவசமாக வழங்கப்பட்டது இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.