கட்சியினர் மீது புகார் எழுந்தால் உடனடியாக நீக்குவேன்! அமைச்சர் துரைமுருகன் அதிரடி!

கட்சியினர் மீது புகார் எழுந்தால் உடனடியாக நீக்குவேன்! அமைச்சர் துரைமுருகன் அதிரடி!

கு.அசோக்,

திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது புகார் எழும் பட்சத்தில் அவர்களை உடனடியாக நீக்கம் செய்வேன் வாலாஜா அருகே நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சால் நிர்வாகிகள் அதிர்ச்சி.

  இராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி தொகுதிக்குட்பட்ட வாலாஜா மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக அக்ராவரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

  மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக கழக  பொதுச்செயலாளருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

  அவர் குறிப்பிடுகையில், இன்று திமுகவின் உயரிய பொறுப்பான பொதுச்செயலாளர் பொறுப்பு வகித்து வந்தாலும் கூட இந்த இடத்தில் என்னை அமர செய்தது  இராணிப்பேட்டை தொகுதி தான்.

  என்னை ஹீரோவாக்கியது இந்த தொகுதி தான். இந்த தொகுதி மக்களுக்கு என் உயிருள்ளவரை நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் என்றார்.

   தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றாலும் கூட பல தொகுதிகளில் முறையாக கட்சி வளரவில்லை என கூறிய அவர், குறிப்பாக காட்பாடி தொகுதியில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் அடுத்த மாதம் முதல் தல ஐந்து பஞ்சாயத்துகள் வீதம் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளதாகவும், அப்போது நமது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது புகார் எழும் பட்சத்தில் அவர்களை உடனடியாக நீக்கம் செய்வேன் என கூறினார்.

அதே நேரத்தில் திமுக மகத்தான வெற்றி பெற நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என பேசினார்.