கலெக்டர்.... எஸ்பி வழங்கிய இலவச ஹெல்மெட்!

கலெக்டர்.... எஸ்பி வழங்கிய இலவச ஹெல்மெட்!

ஜி.கே.சேகரன்,

 ஆம்பூரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு அறிவுரை வழங்கி தலைகவசம் இலவசமாக அணிவித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய  ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆம்பூர் உட்கோட்டம், போக்குவரத்து காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

 இதில் மாவட்ட  ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 அப்போது, தலைகவசம் அணிவது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.

 அதனைத் தொடர்ந்து சாலையில் தலைகவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் அணிவித்தினர்.

 இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், மற்றும் ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என  பலர் பங்கேற்றனர்.