100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!

கு.அசோக்,
100 விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சரின் கைகலால் அரசு வேலைக்கான ஆணை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் நடத்தினார். முன்னதாக பொலிவுறும் நகரம் திட்டத்தில் அமையவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்ட அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அமைச்சர்கள் துரைமுருகன்,காந்தி,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன்,கதிர் ஆனந்த்,மாவட்ட ஆட்சியர்கள் சுப்புலெட்சுமி,சந்திரகலா,டி.ஐஜி தேவராணி உள்ளிட்ட பலதுறையின் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு செயலாக்க திட்டம் மகளிர்துறை விளையாட்டுத்துறை உள்ளிட்ட பலதுறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்தார்.
மேலும் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தி மக்களுக்கு அரசின் திட்டங்களை உடனுக்குடன் கொண்டு சேர்க்க வேண்டுமென அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
முன்னதாக காட்பாடி விருதம்பட்டில் பொலிவுறும் நகரம் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
இராணிப்பேட்டை மாவட்டம்,
விரைவில் 100 வீரர் - வீராங்கனைகளுக்கு அரசு வேலை முதல்வர் கையால் வழங்கப்படும் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசினார்.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் 288 ஊராட்சியின் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நீகழ்வு நடைபெற்றது.
மேலும் ஊரக வளர்ச்சி, பொதுப்பணி துறை மூலம் 19.15 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 9.21 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைத்தல், 7200 பேருக்கு அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தொடர்ந்து மாநில கைத்தறி மற்றும் துணினூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி துணை முதல்வருக்குக்கு செங்கோல் வழங்கி சிறப்பிக்கப்பட்டதோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மேலும் தேசிய அளவில் தங்க பதக்கம் வென்ற இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், யாசினி இரண்டு வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கி துணை முதல்வர் கௌரவித்தார்.
அதே போல் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, முடிக்கப்பட்ட கட்டிடங்கள், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் துவக்கி வைத்தார்.
முன்னதாக அண்ணல் அம்பேத்காரின் 68 நினைவு தினத்தையோட்டி மேடையில் அமைக்கப்பட்ட டாகடர் அம்பேத்கார் திருவுருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அம்பேத்கார் கொள்கையை கொண்டு செல்லும் திராவிட மாடல் அரசாக செயலாற்றி வருகிறது. தமிழக அரசின் பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டதால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என பெருமிதமாக கூறினார்.
சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது போல 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும், பெண்கள் சுய மரியாதையுடன் வாழ மகளிர் சுழ உதவிகுழுக்களுக்கு இதுவரை 92 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.
எது திராவிட மாடல் அரசு என கேள்வி கேட்பவர்களுக்கு, எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் அரசு, மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்வதாக பேசினார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு மாதம்தோறும் 1 கோடியை 16 லட்சம் வழங்கப்படுகிறது. எனவும் அதேபோல் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்பட்டு வருவதாக பேசினார்
இந்த நிகழ்ச்சியில், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ எல் ஈஸ்வரப்பன், முனிரத்தினம், மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா, உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.