இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து பா.ம.க.வினர் போராட்டம்!

இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து பா.ம.க.வினர் போராட்டம்!

கு.அசோக்

வேலூரில் 10.5 சதவிகித வன்னியர் தனி இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை மீண்டும் அமுல்படுத்த கோரியும் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் பாமக ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம்.

 வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் மீண்டும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த கோரியும் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய கோரியும் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதனை மாநில துணை பொதுசெயலாளர் இளவழகன் துவங்கி வைத்தார் இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் முரளி,முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம்,நிர்வாகிகள் பொய்கை ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசன் ,சரவணன்,உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.