காவல் நிலையத்தில் அனுமதி பெற்று  போதை "கள்" இறக்கும் தொழில் படுஜோர்! உயர் அதிகாரிவரை மாமுல் பெறுவதாக பரபரப்பு பேட்டி!

கு.சக்திவேல்,

 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள பனை மரங்களில் தடைசெய்யப்பட்ட போதை "கள்" இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.

   தமிழக அரசு பனை மரங்களில் இருந்து கல்லிறக்கும் தொழில் சட்ட விரோதமானது என கூறி வரும் நிலையில் செங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பனையேறும் தொழிலாளிகளிடம் பட்டியலிட்டு காவல் உதவி ஆய்வாளர், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி¢, உளவுத்துறை பிரிவினர் என தனித்தனியாக பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு அனுமதி அளித்து வரும் செயல் இப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

   சட்டத்தை காக்க வேண்டிய காவல்துறையே இது போன்ற சட்ட விரோத செயல்களுக்கு துணை போகின்றனர்.  அதற்காக அவர்களுக்கு வாரத்திற்கு 3 ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை மாமூல் கட்டி இத் தொழில் ஈடுபடுவதாகவும் உச்சிமலை குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இந்த தகவல்களை குறித்து  பேட்டியளித்திருக்கிறார்.

  இந்த தகவல் வெளியானதும், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பாச்சல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட உச்சிமலை குப்பம் பகுதியில்  கள் விற்பனை நடைபெறுவது குறித்து க மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் அளிக்கவில்லை என கூறப்படும் நிலையல், பாச்சல் காவல்நிலையத்தில் பணியாற்றும்  தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம் என்பவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

 எது எப்படியோ,  காவல் ஆய்வாளர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், உளவுத்துறை பிரிவினர் என பட்டியலிட்டு பணம் வாங்குவதாக கள் இறக்கும் தொழிலாளி குமுறும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.