அரசு மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு! குழந்தை இறந்து அதிர்ச்சி!

அரசு மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு! குழந்தை இறந்து அதிர்ச்சி!

 ஜி.கே.சேகரன்,

  30 ஆயிரம் அளவிலான மருந்துகள் வாங்கிக் கொடுத்தும் இரண்டு பெண் குழந்தைகளை பறிகொடுத்த தந்தை! திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடா குழந்தை இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த செலந்தம்பள்ளி பகுதியை சார்ந்த அண்ணாதுரை மகன் அருண் ( 28) இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.

   இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகியது, அவருக்கு  ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

  குழந்தையின் எடை குறைவாக உள்ளது காரணத்தால் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அருண் 30,000 அளவிலான  ஊசிகள் மருந்து மாத்திரைகளை திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு  குழந்தையை காப்பாற்ற வாங்கிக் கொடுத்துள்ளார்.

  அப்படியிருக்க மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை இறந்த உள்ளது.

  குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நலமாக உள்ளது என கூறியுள்ளனர் ஆனால் இரவு   திடீரென குழந்தை இறந்து விட்டதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த அருள் மற்றும் அவருடைய மனைவி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கத்தி கதறினர்.

    மேலும் இதுகுறித்து குழந்தையின் தந்தையான அருண் 30 ஆயிரம் அளவிலான மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்தும் என் குழந்தை காப்பாற்ற முடியவில்லை. அதற்கு நான் தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று இருப்பேன் குற்றம் செய்தவர்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தண்டிக்க வேண்டும் எனவும் ஆதங்கம் தெரிவித்தார்.