ராகுல் காந்தியை புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ! ஹோ... இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்குதா!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
ராகுல் காந்திக்கு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருந்து வருவதை பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ராகுல் காந்தியை புகழ்ந்து தள்ளி அரசியலை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார். சமீபத்தில் ராகுல் காந்தி உணவகம் ஒன்றிற்கு சென்று அங்கு மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்களுடன் பேசி சிரித்துக் கொண்டே உணவருந்தும் வீடியோ ஒன்று நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனை ரீ ட்விட் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காத சூழலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அதிமுக மூத்த தலைவரே பாராட்டியது அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியது.
இதுதொடர்பாக பேட்டியளித்த செல்லூர் ராஜு, "அந்த பதிவை நான் தான் போட்டேன். முன்னாள் பிரதமரின் மகன் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் ராகுல் காந்தி உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டார். எங்கள் எடப்பாடி பழனிசாமியும் அப்படித்தான் எந்த பந்தாவும் இல்லாமல் இருப்பார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு எளிமையாக அனைத்து மக்களுடனும் அமர்ந்து ராகுல் சாப்பிடுவதை ரசித்துப் பகிர்ந்தேன். இதுதவிர வேறு எதுவும் அதில் அர்த்தம் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி செய்யும் நன்மைகள் அனைத்தையும் பாராட்டி இருந்தேன். இதுதவிர நான் அதிமுகவில் அதிருப்தியில் எல்லாம் இல்லை. நாங்கள்தான் அதிமுகவை உருவாக்கியவர்கள். அதிமுக உருவாவதற்கு முன்பு இருந்தே நான் எம்ஜிஆரின் ரசிகன்" என்று விளக்கம் அளித்தார்.
அதிமுக மூத்த தலைவர் செல்லூர் ராஜு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திடீரென பாராட்டியது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில், விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளரான மாணிக்கம் தாகூர், தனது எக்ஸ் தளத்தில், "அண்ணனுக்கு நன்றி" என்று செல்லூர் ராஜுவின் பதிவிற்கு கீழ் தெரிவித்துள்ளார். அதேபோல, பல காங்கிரஸ் தலைவர்களும் செல்லூர் ராஜுவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
செல்லூர் ராஜூ சாதாரணமாக செய்கின்ற எந்த செயலுக்கும் பல்வேறு அர்த்தம் இருக்கும் என்றூ கூறும் பழை தலைவர்கள், செல்லூர் ராஜூவின் இந்த பாராட்டு ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்றே காட்டுகிறது என்கிறார்கள்.