ரயிலில் கடத்திவரப்பட்ட 25 கிலோ கஞ்சா குடியாத்தத்தில் பறிமுதல்! இரண்டு பேர் கைது!

ரயிலில் கடத்திவரப்பட்ட 25 கிலோ கஞ்சா குடியாத்தத்தில் பறிமுதல்! இரண்டு பேர் கைது!

கு.அசோக்,

 வேலூர் மாவட்டம், குடியாத்தம் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த குடியாத்தம் போலீசார் அவ்வழியாக வந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் மூரணாக  பதிலளித்தனர்.ஆகவே அவர்கள் கொண்டு வந்த 3 பைகளை சோதனை செய்து பார்த்தபோது அதில் 25 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதன்  மதிப்பு 2.50 லட்சம் ஆகும்.

  அவர்களிடம் தீவிர விசாரணை செய்த போது, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது காலித், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபிஷேக் என்பது தெரியவந்தது. இருவரும் ஒரிசாவில் கஞ்சா வாங்கிக்கொண்டு ரயில் மூலம் திருப்பூர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது.

  ரயில் குடியாத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

 சோதனை மேற்கொள்வதை கண்ட முகமது காலித் மற்றும் அபிஷேக் இருவரும் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இறங்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

 பின்னர் இருவரையும் கைது செய்த குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 தொடர்ந்து ரயில் மூலம் ஒரிசாவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா வருவது தொடர் கதையாகவே இருப்பதாகவும் இதனை தமிழக அரசு தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.