மீண்டும் எட்டு பேர் நீக்கம்! தட்டி தூக்கும் திமுக!!

ஆர்.ராஜேஷ்குமார்,
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக திமுகவில் இருந்து 56 பேர் தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித் ஏற்கனவே அறிவித்தார்.
இது நகர்புற தேர்தல் நடைமுறையிலிருந்த போது செய்யப்பட்ட அறிவிப்பு ஆகும்
அதன் பின்னர் ரிசல்ட் வந்ததும், பல இடங்களில் கூட்டணி தர்மத்தை திமுகவினர் காற்றில் பறக்கவிட்டனர்.இந்த விவகாரத்தை காங்கிரஸ்,விசிக, மதிமுக மற்றும் கம்யூகட்சிகள் திமுக தலைமைக்கு பஞ்சாயத்து இட்டுச் சென்றார்கள்.
கோபமுற்ற அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் முதன்முறையாக சாட்டையை சுழற்றினார்.
கூட்டணி தர்மத்தை மீறி பதவி பிடித்தவர்கள் உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து பாருங்கள் என்றார்.
இதை அக்கட்சியினர் முழுமையாக ஏற்கவில்லை. குறிப்பாக கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தினார் குறுக்கு வழி தலைவர் ஜெயந்தி.
பொறுக்காத தலைமை ஒரு எம் .எல் .ஏ.உட்பட பலரை கட்சியிலிருந்து நீக்கி கரார் காட்டியது.
பின்னர் அவர்களில் சிலரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டது தனிக்கதை.
இந்நிலையில் தி.மு.க தலைமை உத்தரவை மதிக்காத நிர்வாகிகள் 8 பேர் அக்கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு பதவியை விட்டுக் கொடுக்க மனமில்லாத திமுக நிர்வாகிகள் சிலர் அடம்பிடித்து வரும் நிலையில் அவர்கள் கட்சியில் இருந்து தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சின்னசேலம் பேரூர்க் கழகச்செயலாளர் எஸ்.கே.செந்தில்குமார், தருமபுரி கிழக்கு மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூர்க் கழக செயலாளர் உதயகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரம் பேரூரைச்சேர்ந்த ஆனந்தன், ரகுமான்ஷான், மோகன்குமார், தஞ்சை வடக்கு மாவட்டம், வேப்பத்தூர் பேரூர்க்கழக துணைச்செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.ராஜதுரை ஆகியோர் கழகக்கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப்பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பட்டியல் மேலும் நீளுமாம்.