2,907 அரசுநிதி உதவி பள்ளிகளில்முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம்! ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி ஆய்வு!

2,907 அரசுநிதி உதவி பள்ளிகளில்முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம்! ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி ஆய்வு!

 ம.பா.கெஜராஜ்,

   ஊரகப் பகுதிகளில் அரசு உதவி பெறும்2,907 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று 15.07.2024 விரிவாக்கம் செய்யப்படவுள்ளதை தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் சேவூர் எம்.டி அரசு நிதி உதவி பெறும் பள்ளியில்  முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து நேற்று முன் தினம் 13.07.2024 ஆய்வு மேற்கொண்டார்.   அந்த வகையில், காட்பாடி ஊராட்சி ஒன்றியம் அம்முண்டி எம்.டி. குமரன் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில்  ஆய்வு மேற்கொண்டார்.

 பின்னர்  ஆட்சி தலைவர் அவர்கள் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் ஆரிமுத்து மோட்டூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லத் திட்ட பயனாளிகளின் இருப்பிடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது காட்பாடி வட்டாட்சியர் திரு.  ஜெகதீஸ்வரன்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. சரவணன்திருமதி ஹேமலதா உட்பட பலர் உடன் இருந்தனர்.