டிரான்ஸ்பரிலிருந்து தப்பிக்க பிள்ளைகளுக்கு மனநிலை பாதிப்பு என்று பொய் சொன்ன போலிஸ் ஆபிசர்!

  ஆர்.ராஜேஷ்குமார்,

 தன்னை டிரான்ஸ்பர் செய்ய போகிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்ட ஒரு போலிஸ் ஆபிசர், தன் பிள்ளைகளுக்கு மனநிலை சரியில்லை என்று பொய் சொல்லி சாதித்துக் கொண்டிருக்கிறார்.

 வரலாற்று சிறப்பு மிக்க ஊர் என்று சொல்லக்கூடிய ஒருங்கிணைந்த மாவட்டத்தின் தலைநகர் வெயிலுக்கு ரொம்பவே பேமஸ். இங்கு சிசிஐடபிள்யூ என்கிற காவல் பிரிவில் ஒரு பெண் ஆபிசர் பணியாற்றுகிறார்.

 இந்நிலையில் இவுங்களை இங்கிருந்து பணியிடமாற்றம் செய்ய இருந்த நிலையில், அதை மோப்பம் பிடித்துக் கொண்ட அவர், தன் பிள்ளைகளுக்கு மனநிலை சரியில்லாமல் இருப்பதால், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் டிரீட்மென்ட் கொடுத்து வருகிறேன், என்று தன் உயர் அதிகாரியிடம் பொய் சொல்லியிருக்கிறார்.

 அவுங்க சொன்னதை கேட்டு நம்பிய அந்த அதிகாரி மனிதாபிமான அடிப்படையில் டிரான்பர் செய்யாமல் விட்டுவைத்தாராம்.

  ஆனால் உண்மையில் அவருடைய பிள்ளைகள்  நன்றாகவே உள்ளார்கள். அவர்கள் ரயில்வே ஜங்ஷன் நகரில் உள்ள பிரபல கிறிஸ்தவ பள்ளியில் நல்லபடியாக படித்து வருகிறார்களாம்.

 ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் ஏற்படும் முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுப்பதே இந்த பிரிவுன் கடமை. அதில் ஏகப்பட்ட வரவாம், ஆகவே அதைவிட்டுச் செல்ல மனமில்லாம தம் பிள்ளைகள் மீது அபாண்டமாக பொய் சொல்லியிருக்கிறார்.

 இப்படிக்கூடவா யாரேனும் செய்வார்கள்.