மகளை வெளிக் கொண்டு வர பி.ஆர்.எஸ். கட்சியை பாஜகவில் கரைக்க உள்ளாரா சந்திர சேகரராவ்!

மகளை வெளிக் கொண்டு வர பி.ஆர்.எஸ். கட்சியை பாஜகவில் கரைக்க உள்ளாரா சந்திர சேகரராவ்!

வி.டி.வித்யாசாகர்,

  மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிறையில் வாடும் தம் மகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக கட்சியை பாஜகவுடன் இணைக்க உள்ளாராம் சந்திர சேகரராவ்.

   நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தெலுங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திர சேகரராவின் பிஆர்எஸ் கட்சி பாஜகவின் பி டீம் என்று இந்தியா கூட்டணியினர் நையாண்டி செய்ததை அறிவோம். அதற்கேற்றவாறு பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சி டம்மி வேட்பாளர்களை நிறுத்தியதாக சொல்லப்பட்டது. 

  இந்நிலையில் பாஜகவில் பிஆர்எஸ் கட்சி கரைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

   தெலங்கானாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. சுமார் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சிக்கு 30 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அண்மையில் முடிந்த மக்களவை தேர்தலில் 17 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட பிஆர்எஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

  ஆனால் காங்கிரஸ் 8, பாஜக 8 மற்றும் எம்ஐஎம் 1 இடம் பிடித்தன. தோல்வி எதிரொலி காரணமாக பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மற்றும் எம்எல்சிக்கள் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சிக்கு தாவி வருகின்றனர். தற்போதுவரை  8 எம்எல்ஏக்கள், 6 எம்எல்சிக்கள் இப்படி தாவியுள்ளனர்¢.

  ஏற்கனவே சந்திர சேகர ராவின் மகலும் முன்னாள் எம்பியுமான கவிதா, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கவிதாவை வெளியே கொண்டு வர சட்டப்படியான பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. இந்நிலையில் கவிதாவின் தம்பியும், பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், முன்னாள் அமைச்சர் ஹரீஸ்ராவ் ஆகியோர் கடந்த 4 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

  அப்போது அவர்கள் கவிதாவை சிறையில் சந்தித்த பின்னர், பாஜக தேசிய தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டா, தெலங்கானா பாஜக தொடர்பாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்துள்ளனர்.

   இந்த சந்திப்பின்போது பிஆர்எஸ் கட்சியை பாஜகவில் இணைப்பது குறித்து பேசப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

 ஆக மொத்தம் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் ஜோதியானதை போல கே.எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர ராவின் பி. ஆர். எஸ் கட்சியும் பாஜகவில் கரைய உள்ளதாக அரசில் நோக்கர்கள் சொல்கிறார்களாம்.