பிரதமர் மோடி நிகழ்ச்சியில் இடறி விழுந்த முன்னாள் அமைச்சர்!

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் இடறி விழுந்த முன்னாள் அமைச்சர்!

உ.சசிகுமார்,

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்ய வேலூர் வந்திருந்தார்.  அதில் அவர் உரையாற்றிவிட்டு புறப்பட்டார். அப்போது அவருடன் பலர் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

 இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக முன்னாள் எம்.பிம்., சி.கோபால் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன் ஆகியோர் பங்கேற்றனர்.

  கூட்டம் முடிந்து மோடி புறப்பட்ட போது அவர் அருகே நின்றுக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கள் இடறி கீழே சரிந்தார். அவரை பிரதமரின் பாதுகாவலர்கள் கைதாங்களாக பிடித்துக்கொண்டனர்.

கே பாண்டுரங்கன் அவர்கள் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தார் தற்போது அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.